sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'காந்தாரா' ஷூட்டிங்கில் மீண்டும் விபத்து

/

'காந்தாரா' ஷூட்டிங்கில் மீண்டும் விபத்து

'காந்தாரா' ஷூட்டிங்கில் மீண்டும் விபத்து

'காந்தாரா' ஷூட்டிங்கில் மீண்டும் விபத்து


ADDED : ஜூன் 16, 2025 12:45 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிவமொக்கா: பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி, நாயகனாக நடித்து, இயக்கிய, காந்தாரா திரைப்படம் 2022ல் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டானது. அமோக வெற்றியால் உற்சாகமடைந்த ரிஷப் ஷெட்டி, படத்தின் முன்கதையாக, காந்தாரா சாப்டர் 1 என்ற படத்தை நடித்து, இயக்கி வருகிறார்.

படத்தில் நடித்த மூன்று நடிகர்கள், ஒன்றரை மாத இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த சூழலில், கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா மாவட்டம், ஹொசநகரின், மாணி அணை பகுதியில் செட் போட்டு, சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, அணையில் படகில் சென்று படப்பிடிப்பு நடத்தினர். படகில் ரிஷப் ஷெட்டி உட்பட, 10க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இருந்தனர்.

அப்போது காற்றின் வேகம் தாங்காமல், படகு திடீரென கவிழ்ந்தது. கலைஞர்கள் நீரில் விழுந்தனர். ஆழம் குறைவான பகுதி என்பதாலும், அனைவருக்கும் நீச்சல் தெரிந்ததாலும், நீந்தி கரைக்கு வந்தனர்.

'காந்தாரா படக்குழுவினருக்கு, அடுக்கடுக்கான பிரச்னைகள் வர, அப்படத்தில் காட்டப்படும் பஞ்சுருளி என்ற கடவுளின் கோபமே காரணம்' என, பலரும் கூறுகின்றனர்.

இதற்கிடையே, மாணி அணை பகுதியில், படப்பிடிப்பு நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் படப் பிடிப்பு நடத்தியுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையறிந்த ஷிவமொக்கா கலெக்டர் குருதத் ஹெக்டே, தாசில்தார் ரஷ்மி மூலமாக, படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us