sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

12 நாட்கள் கழித்து அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு; இன்று முதல் மீண்டும் தொடக்கம்

/

12 நாட்கள் கழித்து அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு; இன்று முதல் மீண்டும் தொடக்கம்

12 நாட்கள் கழித்து அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு; இன்று முதல் மீண்டும் தொடக்கம்

12 நாட்கள் கழித்து அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு; இன்று முதல் மீண்டும் தொடக்கம்


ADDED : மே 20, 2025 07:31 AM

Google News

ADDED : மே 20, 2025 07:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: போர் பதட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த அட்டாரி, வாகா எல்லையில் நிறுத்தப்பட்டு இருந்த கொடியிறக்க நிகழ்வு 12 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் துவங்குகிறது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்தது. இதன் காரணமாக, இருநாடுகளுக்கும் இடையேயான அட்டாரி, வாகா எல்லை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

நாள்தோறும் மாலையில் நடைபெறும் கொடியிறக்க நிகழ்வும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந் நிலையில், இன்று முதல் தினமும், அட்டாரி,வாகா எல்லை கொடியிறக்க நிகழ்வு நடைபெறும்.

12 நாட்கள் கழித்து, பஞ்சாப் அமிர்தசரசில் உள்ள அட்டாரி, வாகா எல்லையிலும், பெரோஸ்பூரில் உள்ள ஹூசைனிவாலா எல்லையிலும் இன்று முதல் மீண்டும் தொடங்கும். இதற்கு முன்னர் இருந்தது போல் அல்லாமல் வாயில்கள் மூடப்பட்டு இருக்கும். நிகழ்வின் போது பங்கேற்பாளர்கள் கைகுலுக்க மாட்டார்கள்.

1959ம் ஆண்டு முதல் எல்லையில் நடத்தப்பட்டு வந்த கொடியிறக்க நிகழ்வு, மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர் மே 8ல் இருந்து நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது 12 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us