sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மனரீதியாக பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஆரோக்கியமாக இல்லை; சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

/

மனரீதியாக பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஆரோக்கியமாக இல்லை; சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

மனரீதியாக பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஆரோக்கியமாக இல்லை; சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

மனரீதியாக பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஆரோக்கியமாக இல்லை; சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

8


ADDED : மே 25, 2025 07:06 PM

Google News

8

ADDED : மே 25, 2025 07:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இல்லை என ஜன்சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்தை பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் புறக்கணித்தது குறித்து பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: நிதிஷ் குமார் ஆரோக்கியமாக இல்லாததால் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர் உடல் ரீதியாகவும், மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார். மிகவும் ஏழ்மையான மாநிலமான பீஹாரின் முதல்வர், வளர்ச்சிக்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் இன்று தே.ஜ., கூட்டணி கட்சி முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளார். அவர் பீஹார் சட்டசபை தேர்தலில் அதிக இடங்களைப் பெற பேரம் பேசச் சென்றுள்ளார். ஒரு பொதுவான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் தேர்வில் தேர்ச்சி பெற உடல் மற்றும் மருத்துவ பரிசோதனைகளை எடுக்க வேண்டும்.

ஆனால் அவரது பெயர் கூட நினைவில் இல்லாத மாநில முதல்வருக்கு அத்தகைய எதுவும் தேவையில்லை. பீஹாரில் நிதிஷ்குமாருக்கு ஆதரவு இருப்பதால் பா.ஜ., அவரை முதல்வராக வைத்துள்ளது. நிதிஷ் குமாரை தேர்தல் வரை முதல்வராக வைத்திருக்க வேண்டியது பா. ஜ.,வின் கட்டாயம். அவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள் என்றால், அவர் அடுத்த கட்சிக்கு இடம் மாறுவார். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.






      Dinamalar
      Follow us
      Arattai