sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கிராம நல பணியாளர்களுக்கு பீஹாரில் ரூ.25,000 உதவித்தொகை

/

கிராம நல பணியாளர்களுக்கு பீஹாரில் ரூ.25,000 உதவித்தொகை

கிராம நல பணியாளர்களுக்கு பீஹாரில் ரூ.25,000 உதவித்தொகை

கிராம நல பணியாளர்களுக்கு பீஹாரில் ரூ.25,000 உதவித்தொகை


ADDED : செப் 21, 2025 11:51 PM

Google News

ADDED : செப் 21, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: பீஹாரில், 'விகாஸ் மித்ரா' திட்டத்தின் கீழ் கிராமங்களில் பணிபுரியும், 10,000க்கும் மேற்பட்டோருக்கு ஒரு முறை உதவித்தொகையாக, 25,000 ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு மொத்தமுள்ள, 243 தொகுதிகளுக்கு அக்., - நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் , அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில், முதல்வர் நிதிஷ் குமார் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், பீஹாரில் விகாஸ் மித்ரா திட்டத்தில் கிராமங்களில் பணிபுரியும், 10,000க்கும் மேற்பட்டோருக்கு ஒரு முறை உதவித்தொகையாக, 25,000 ரூபாய் வழங்கப்படும் என, அவர் நேற்று அறிவித்தார்.

மேலும், அவர்களின் போக்குவரத்து செலவுக்கான மாத உதவித்தொகை, 1,900 ரூபா யில் இருந்து 2,500 ஆகவும்; எழுது பொருள் வாங்குவதற்கான உதவித்தொகை, மாதத்திற்கு 900 ரூபாயி ல் இருந்து 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

மிகவும் பின்தங்கிய சமூகத்தினர் வசிக்கும் கிராமங்களில், அரசு திட்டங்களை கொண்டு சேர்க்கும் பணியில், விகாஸ் மித்ரா எனப்படும் கிராம நல பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us