sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியா-பாக்., எல்லை அருகே பாகிஸ்தானை சேர்ந்த இருவர் உடல்கள் மீட்பு: போலீசார் விசாரணை

/

இந்தியா-பாக்., எல்லை அருகே பாகிஸ்தானை சேர்ந்த இருவர் உடல்கள் மீட்பு: போலீசார் விசாரணை

இந்தியா-பாக்., எல்லை அருகே பாகிஸ்தானை சேர்ந்த இருவர் உடல்கள் மீட்பு: போலீசார் விசாரணை

இந்தியா-பாக்., எல்லை அருகே பாகிஸ்தானை சேர்ந்த இருவர் உடல்கள் மீட்பு: போலீசார் விசாரணை

2


ADDED : ஜூன் 29, 2025 11:19 AM

Google News

2

ADDED : ஜூன் 29, 2025 11:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெய்ப்பூர்: ஜெய்சால்மரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 15 வயது சிறுமி மற்றும் 18 வயது சிறுவன் என இருவரது சிதைந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 15 வயது சிறுமி மற்றும் 18 வயது சிறுவன் என இருவரது சிதைந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த உடலை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பாகிஸ்தான் நாட்டு அடையாள அட்டைகள் மற்றும் சிம் கார்டுகள் மீட்கப்பட்டது. இது காதல் விவகாரமா அல்லது சதித்திட்டமா என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது என ஜெய்சால்மர் போலீசார் தெரிவித்தனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே இருவரது சிதைந்த உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பையும், சந்தேகத்தையும் கிளப்பி உள்ளது.






      Dinamalar
      Follow us