sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காதலியை கத்தியால் குத்திய காதலன் கைது

/

காதலியை கத்தியால் குத்திய காதலன் கைது

காதலியை கத்தியால் குத்திய காதலன் கைது

காதலியை கத்தியால் குத்திய காதலன் கைது


ADDED : ஜன 27, 2024 11:08 PM

Google News

ADDED : ஜன 27, 2024 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாவேரி: வேறு ஒருவருடன் பழகுவதாக சந்தேகம் அடைந்து, காதலியை கத்தியால் குத்திய காதலன் கைது செய்யப்பட்டார்.

ஹாவேரி மாவட்டம், ஷிகாவியின் மகேஷ் மைசூரு, 22. இவரது காதலி லட்சுமி, 20. கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலிக்கின்றனர். மெடிக்கல் ஷாப்பில் லட்சுமி வேலை செய்து வருகிறார்.

சில நாட்களாக, மகேஷ் எப்போது போன் செய்தாலும், லட்சுமியின் மொபைல் நம்பர் 'பிசி' என்று வந்தது. இதனால் வேறு ஒருவருடன், லட்சுமி பழகுவதாக, மகேஷ் சந்தேகம் அடைந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும், லட்சுமி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

அவரை வழிமறித்த மகேஷ், “என்னை தவிர்த்துவிட்டு, வேறு ஒருவருடன் பழகுகிறாயா?” என்று கேட்டு தகராறு செய்தார். திடீரென மறைத்து வைத்திருந்த, கத்தியை எடுத்து லட்சுமியை குத்திவிட்டுத் தப்பினார். உயிருக்கு போராடியவரை அப்பகுதி மக்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தலைமறைவாக இருந்த மகேஷை நேற்று மதியம், ஷிகாவி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us