sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அதிகாரிகள் மீது தாக்குதல்: ஹிமாச்சல் அமைச்சர் மீது வழக்கு பதிவு

/

அதிகாரிகள் மீது தாக்குதல்: ஹிமாச்சல் அமைச்சர் மீது வழக்கு பதிவு

அதிகாரிகள் மீது தாக்குதல்: ஹிமாச்சல் அமைச்சர் மீது வழக்கு பதிவு

அதிகாரிகள் மீது தாக்குதல்: ஹிமாச்சல் அமைச்சர் மீது வழக்கு பதிவு


ADDED : ஜூலை 01, 2025 04:41 PM

Google News

ADDED : ஜூலை 01, 2025 04:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிம்லா:சாலை பணிகள் தாமதமாக இருப்பதாக கூறி, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளை தாக்கிய மாநில பஞ்சாயத்துராஜ் அமைச்சர் அனிருத் சிங் ரானா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று சிம்லாவில் நடக்கும் சாலை பணிகள் குறித்து நேரில் பார்வையிட வந்த அமைச்சர் அனிருத் சிங் ரானா மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஏன் பணிகள் தாமதமாக நடக்கிறது என்று அதிகாரிகளை மிரட்டி, தாக்குதல் நடத்தினர். இதில் தொழில்நுட்ப பிரிவு மேலாளராக உள்ள அச்சல் ஜிண்டால் பலத்த காயமடைந்தார். அதை தொடர்ந்து அவர், சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, அச்சல் ஜிண்டால், போலீசில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து அமைச்சர் அனிருத் சிங் ரானா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது மிரட்டல் மற்றும் அரசு அதிகாரிகளை தடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு மாநில பா.ஜ., தரப்பில் கண்டிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us