sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்., விரும்பவில்லை: அமித்ஷா

/

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்., விரும்பவில்லை: அமித்ஷா

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்., விரும்பவில்லை: அமித்ஷா

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்., விரும்பவில்லை: அமித்ஷா

1


ADDED : மார் 15, 2025 03:11 PM

Google News

1

ADDED : மார் 15, 2025 03:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கவுகாத்தி: '' அசாமில் அமைதி ஏற்பட்டு வளர்ச்சி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

அசாமில் நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: அசாமில் 10 ஆயிரம் இளைஞர்கள் ஆயுதங்களை கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தில் அமைதி திரும்பி உள்ளது. அசாமிற்கு 3 லட்சம் கோடி உள்கட்டமைப்பு திட்டங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. கூடுதலாக, சமீபத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு முதலீடு கிடைத்து உள்ளது.

அசாமில் அமைதி நிலவ காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. பிரதமர் மோடி அமைதியை நிலைநாட்டியதுடன், உள்கட்டமைப்பை வளர்த்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுவதை உறுதி செய்துள்ளார். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் அசாமிற்கு ரூ.1.27 லட்சம் கோடி நிதி ஒதுக்கியது. பிரதமர் மோடி ஆட்சியில் இந்த தொகையானது நான்கு மடங்கு அதிகரித்து ரூ.4.95 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அசாமை புறக்கணித்து, அமைதி, வளர்ச்சியை ஏற்பட காங்கிரஸ் அனுமதிக்காதது ஏன்?பிரதமர் மோடி ஆட்சியில் அனைத்தும் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.






      Dinamalar
      Follow us