sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜாதியை அடையாளப்படுத்தி இந்தியாவை விமர்சிப்பதா?: டிரம்ப் ஆலோசகர் மீது அரசியல் தலைவர்கள் பாய்ச்சல்

/

ஜாதியை அடையாளப்படுத்தி இந்தியாவை விமர்சிப்பதா?: டிரம்ப் ஆலோசகர் மீது அரசியல் தலைவர்கள் பாய்ச்சல்

ஜாதியை அடையாளப்படுத்தி இந்தியாவை விமர்சிப்பதா?: டிரம்ப் ஆலோசகர் மீது அரசியல் தலைவர்கள் பாய்ச்சல்

ஜாதியை அடையாளப்படுத்தி இந்தியாவை விமர்சிப்பதா?: டிரம்ப் ஆலோசகர் மீது அரசியல் தலைவர்கள் பாய்ச்சல்


ADDED : செப் 02, 2025 02:28 AM

Google News

ADDED : செப் 02, 2025 02:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'இந்திய மக்களின் செலவில், பிராமணர்கள் லாபமடைந்து வருகின்றனர்' என, அமெரிக்க அதிபர் டிரம்பின் வணிக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாததால், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி அறிவித்தார். இதனால், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப் பின் பிரதமர் மோடி சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அமெரிக்காவிடம் இருந்து வலுவான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்க சமூகத்தில் உயர்வான அந்தஸ்தில் இருக்கும் பெரும் பணக்காரர்கள், 'பாஸ்டன் பிராமணர்கள்' என விமர்சிக்கப்படுகின்றனர்.

சமூக மற்றும் பொருளாதார ரீதியாக உயர்வான அந்தஸ்தில் இருப்பவர்களை அமெரிக்காவில் இப்படி குறிப்பிடுகின்றனர்.

இந்த சொலவடையை பயன்படுத்தி, இந்திய மக்களின் செலவில், பிராமணர்கள் பெரும் லாபம் சம்பாதித்து வருகின்றனர் என அதிபர் டிரம்பின் வணிக ஆலோசகர் பீட்டர் நவரோ குற்றஞ்சாட்டினார்.

பீட்டர் நவரோவின் இந்த கருத்துக்கு நம் நாட்டில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினரான சஞ்சீவ் சன்யால், காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சஞ்சீவ் சன்யால் கூறியதாவது:

நவரோவின் கருத்து, அவர் யார் என்பதை வெளிப்படுத்தி விட்டது.

இந்தியாவுக்கு எதிரான கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிடும் கட்டுப்பாடு அவரிடமே இருக்கிறது என்பது தெரிந்துவிட்டது. 19ம் நுாற்றாண்டின் காலணி ஆதிக்கத்தில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்ட விமர்சனம் போல இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சிவசேனா உத்தவ் பிரிவு எம்.பி.,யான பிரியங்கா சதுர்வேதியும் சமூக வலைதளத்தில் கண்டனத்தை பதிவு செய்து உள்ளார். அதில் கூறப் பட்டிருப்பதாவது:

பீட்டர் நவரோ தன் கருத்தை வெளிப்படுத்த, இந்தியாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஜாதி அடையாளத்தை பயன்படுத்தி இருப்பது வெட்கக்கேடானது. அமெரிக்காவை பொறுத்தவரை பெரும் பணக்காரர்களை குறிக்க, 'பாஸ்டன் பிராமணர்கள்' என்ற சொலவடையை பயன்படுத்துவதுண்டு.

ஆனால், இந்தியாவில் அது ஒரு ஜாதியின் அடையாளம். டிரம்ப் நிர்வாகத்தில் இருக்கும் மூத்த உறுப்பினரான நவரோவுக்கு இது நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் வேண்டுமென்றே இந்த சொலவடையை அவர் பயன்படுத்தி இருக்கிறார். இது மிகவும் தவறானது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா, திரிணமுல் காங்., - எம்.பி., சகாரிகா கோஷ் உள்ளிட்டோரும் நவரோவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us