sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்திய வரலாற்றின் இருண்ட காலம் அவசரநிலை: பிரதமர் மோடி விமர்சனம்

/

இந்திய வரலாற்றின் இருண்ட காலம் அவசரநிலை: பிரதமர் மோடி விமர்சனம்

இந்திய வரலாற்றின் இருண்ட காலம் அவசரநிலை: பிரதமர் மோடி விமர்சனம்

இந்திய வரலாற்றின் இருண்ட காலம் அவசரநிலை: பிரதமர் மோடி விமர்சனம்


ADDED : ஜூன் 26, 2025 01:27 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 01:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : 'எமர்ஜென்சி எனப்படும் அவசரநிலை காலத்தில், அரசியலமைப்பு மீறப்பட்டதை எந்தவொரு இந்தியரும் மறக்க மாட்டார்' என, பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

மறைந்த பிரதமர் இந்திரா, 1975ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி திடீரென அவசரநிலையை பிரகடனப்படுத்தினார்.

இதனால், அரசு இயந்திரத்தின் ஒட்டுமொத்த அதிகாரமும் அவர் வசம் வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும், மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மொத்தம் 21 மாதங்கள் நீடித்த இந்த அவசரநிலை காலக்கட்டத்தை, ஜனநாயகத்தின் கருப்பு பக்கம் என காங்கிரஸ் அல்லாத அரசியல் கட்சிகள் விமர்சித்தன.

அவசரநிலை அறிவிக்கப்பட்ட தினத்தை, பா.ஜ., கருப்பு தினமாக அனுசரித்து வருகிறது. அவசரநிலை அறிவிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையில், தன் சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

இந்திய ஜனநாயக வரலாற்றின் இருண்ட பக்கங்களை நினைவுபடுத்தும் அவசரநிலையின் 50-வது ஆண்டு நாள் இது. இந்திய மக்கள் இந்த நாளை, அரசியலமைப்பு படுகொலை நாளாக நினைவுகூர்கின்றனர்.

இந்த நாளில், இந்திய அரசியலமைப்பு வகுத்துக் கொடுத்த மதிப்பீடுகள் புறந்தள்ளப்பட்டன. மக்களின் அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. ஊடகச் சுதந்திரம் பறிக்கப்பட்டது.

அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், சாமானிய மக்கள் என பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தகைய நெருக்கடிகளால் காங்கிரஸ் அரசு ஜனநாயகத்தையே சிறை வைத்தது.

நம் அரசியலமைப்பின் ஆன்மா சிதைக்கப்பட்ட விதத்தை இந்தியர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

பார்லிமென்டின் குரல் வெளிவராமல் தடுக்கப்பட்டது. நீதிமன்றங்களையே கட்டுப்படுத்தும் முயற்சிகள்கூட மேற்கொள்ளப்பட்டன. 42-வது சட்டத்திருத்தம் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், நலிந்த மக்களே குறிவைக்கப்பட்டனர். அவர்களின் அடையாளம் சிதைக்கப்பட்டது.

பல்வேறு சித்தாத்தங்களை கொண்ட பல தரப்பு மக்களும் அவசரநிலையை எதிர்த்து நின்றனர். அவர்கள் அனைவரும், இந்தியாவின் ஜனநாயக தன்மை காக்கப்பட வேண்டும் என்ற ஒற்றை புள்ளியில் ஒன்றுபட்டனர்.

இந்த நாளில், அவசரநிலையை எதிர்த்து நின்ற ஒவ்வொருவருக்கும் எங்கள் வணக்கத்தை உரித்தாக்குகிறோம்.

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது நான் ஆர்.எஸ்.எஸ்., தொண்டனாக இருந்தேன். அவசரநிலை எதிர்ப்பு இயக்கத்தில் நான் இருந்தது, எனக்கு மிகப்பெரிய படிப்பினை.

அது, நம் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் பதிலடி

காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:பா.ஜ., தலைமையிலான 11 ஆண்டுகள் 30 நாட்கள் ஆட்சியில், நம் ஜனநாயகம் திட்டமிடப்பட்ட மற்றும் ஆபத்தான ஐந்தடுக்கு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இது, அறிவிக்கப்படாத 11 ஆண்டு அவசரநிலை. அரசியலமைப்பின் மீதான தாக்குதல், பார்லிமென்டை பலவீனப்படுத்துதல், மத்திய - மாநில உறவுகளை அழித்தல், நீதித் துறைக்கு சேதம் விளைவித்தல் என அவசரநிலை செயல்பாடுகள் தொடர்கின்றன. மேலும், வரி பயங்கரவாதம், வணிக நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் அளிப்பது, அரசுக்கு எதிரான ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு, பத்திரிகையாளர்கள் கைது, செய்தி நிறுவனங்களுக்கு மிரட்டல் போன்ற அழுத்தம் கொடுக்கப்படுகிறது.பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களை துன்புறுத்தவும் அவதுாறு பரப்பவும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ., மற்றும் வருமான வரித் துறை போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பா.ஜ.,வுக்கு 8,000 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்களை சட்டவிரோதமாக வசூலிப்பதற்கு புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டன. கட்சி மாறி பா.ஜ.,வில் சேர்பவர்கள், தானாகவே அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., பிடியில் இருந்து தப்புகின்றனர். போராடும் விவசாயிகளை காலிஸ்தானியர்கள் என்றும், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவளிப்பவர்கள் நகர்ப்புற நக்சல்கள் என்றும் முத்திரை குத்தப்படுகிறது. மகாத்மா காந்தியை கொன்றவர்கள் மகிமைப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us