sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நான் வெறுப்பு அரசியல் செய்தது இல்லை: சுமலதா

/

நான் வெறுப்பு அரசியல் செய்தது இல்லை: சுமலதா

நான் வெறுப்பு அரசியல் செய்தது இல்லை: சுமலதா

நான் வெறுப்பு அரசியல் செய்தது இல்லை: சுமலதா


ADDED : பிப் 29, 2024 11:21 PM

Google News

ADDED : பிப் 29, 2024 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாண்டியா: ''வெறுப்பு அரசியல் செய்தது இல்லை. தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சித்ததும் இல்லை,'' என்று, மாண்டியா எம்.பி., சுமலதா கூறி உள்ளார்.

மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

கடந்த லோக்சபா தேர்தலில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டேன். இம்முறை வேறு வழியில் தேர்தலை சந்திக்கிறேன். அந்த தேர்தலும், இந்த தேர்தலும் வேறு. எனது முடிவை நான் தெளிவாக சொல்ல வேண்டும். பா.ஜ., மேலிடம் முடிவு எடுக்கட்டும். வரும் நாட்களில் ஒவ்வொரு தொகுதியாக சென்று, மக்களை சந்திப்பேன். இம்முறை மாண்டியாவில் தேர்தல் சாதாரணமாக நடக்காது; சிறப்பாக நடக்கும்.

என்னை வழிநடத்துபவர்கள் கடைசி வரை என்னுடன் இருப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. நான் வெறுப்பு அரசியல் செய்தது இல்லை. தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சித்ததும் இல்லை. ஆரம்பத்தில் இருந்தே எனது பேச்சை பாருங்கள். நான் மிகவும் மென்மையான குணம் கொண்டவர்.

விதான் சவுதா ஜனநாயகத்தின் கோவில். அங்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கோஷம் எழுப்பியவர் யாராக இருந்தாலும், அவருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கூறினார்.






      Dinamalar
      Follow us