sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தட்கல் முறையில் ரயில் டிக்கெட் முன் பதிவுக்கு இ-ஆதார்; பயணிகளுக்கு புதிய வசதி

/

தட்கல் முறையில் ரயில் டிக்கெட் முன் பதிவுக்கு இ-ஆதார்; பயணிகளுக்கு புதிய வசதி

தட்கல் முறையில் ரயில் டிக்கெட் முன் பதிவுக்கு இ-ஆதார்; பயணிகளுக்கு புதிய வசதி

தட்கல் முறையில் ரயில் டிக்கெட் முன் பதிவுக்கு இ-ஆதார்; பயணிகளுக்கு புதிய வசதி

11


ADDED : ஜூன் 05, 2025 09:57 AM

Google News

11

ADDED : ஜூன் 05, 2025 09:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: திடீர் பயணத்திற்கு எளிதில் ரயில் டிக்கெட் பெறும் வகையில், விரைவில் இ-ஆதார் மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகமாகிறது என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் நிறுவனம் பயணியருக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இதில் பயணியர், ஒரு நாள் முன்னதாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தட்கல் முறை இருந்து வருகிறது.

எனினும், இந்த தட்கல் முறையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாமல் பயணியர் பாதிப்புக்குள்ளாவதாகவும், தொழில்நுட்ப குறைபாடுகளை ஆய்வு செய்து களைய, உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கைகள் வந்த வண்ணம் இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கே தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய காத்திருந்தாலும் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேருக்கு இணையதளம் வேலை செய்யவில்லை என புகார் எழுந்து வருகிறது. இதனால் தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து ஐ.ஆர்.சி.டி.சி., நீக்கியது.

இந்நிலையில், திடீர் பயணத்திற்கு எளிதில் ரயில் டிக்கெட் பெறும் வகையில், விரைவில் இ-ஆதார் மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகமாகிறது என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, இ-ஆதார் கட்டாயம் செய்யப்படும். இது உண்மையான பயனர்கள் உறுதிப்படுத்தப்பட்டு டிக்கெட்டுகளைப் பெற உதவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த புத்தம் புதிய அறிமுகம் குறித்து உங்களது கருத்தை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!






      Dinamalar
      Follow us