sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது: சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி நடவடிக்கை

/

ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது: சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி நடவடிக்கை

ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது: சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி நடவடிக்கை

ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது: சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி நடவடிக்கை


ADDED : மே 13, 2025 04:40 PM

Google News

ADDED : மே 13, 2025 04:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி:ஆந்திரப் பிரதேச மதுபான ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கோவிந்தப்பா பாலாஜியை எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தது.

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில், பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று குற்றவாளிகளுக்கும் சிறப்பு புலனாயவுக்குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. விஜயவாடாவில் உள்ள தனது அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகுமாறு புலனாய்வு நிறுவனம் கேட்டுக் கொண்டது. இருப்பினும், அவர்களில் யாரும் விசாரணைக்கு வரவில்லை.

கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தனுஞ்சய ரெட்டி, கிருஷ்ண மோகன் ரெட்டி மற்றும் பாரதி சிமென்ட்ஸ் இயக்குனர் கோவிந்தப்பா பாலாஜி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று ஆந்திரப் பிரதேச மதுபான ஊழல் வழக்கில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கோவிந்தப்பா பாலாஜி, சிறப்பு புலனாய்வுக் குழுவின் அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். துல்லியமான உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் பாலாஜி மைசூருவில் காவலில் எடுக்கப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

அதிகாரப்பூர்வ வட்டார தகவலின்படி, கோவிந்தப்பா பாலாஜி தற்போது மைசூருவிலிருந்து போக்குவரத்து வாரண்டுடன் விஜயவாடாவிற்கு கொண்டு செல்லப்படுகிறார். பாலாஜி பாரதி சிமென்ட்ஸில் இயக்குநராக பணியாற்றுவதாக அறியப்படுகிறது.

இந்தக் கைதுடன், மதுபான ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது ஐந்தாக உயர்ந்துள்ளது.






      Dinamalar
      Follow us
      Arattai