sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழ் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு தேசிய விருது

/

தமிழ் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு தேசிய விருது

தமிழ் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு தேசிய விருது

தமிழ் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு தேசிய விருது


ADDED : ஜன 26, 2024 07:12 AM

Google News

ADDED : ஜன 26, 2024 07:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடகாவில் புணிபுரியும், மதுரையைச் சேர்ந்த தமிழ் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி திவ்யா பிரபுவுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, நேற்று தேசிய விருது வழங்கினார்.

தேர்தல் பணியில் சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு தேசிய அளவில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2023ம் ஆண்டுக்கான விருதுகளை, இம்மாதம் 17ம் தேதி, தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதில், சித்ரதுர்கா கலெக்டர் திவ்யா பிரபுவுக்கு, வாக்காளர் பட்டியல் நிர்வகிப்பில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இவர், தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்தவர். இது போன்று, கர்நாடக வணிக வரி கமிஷனர் ஷிகாவுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

இவர்களுக்கு, டில்லியில் நேற்று நடந்த தேசிய வாக்காளர் தின விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேசிய விருது வழங்கி கவுரவித்தார்.

திவ்யா பிரபு கூறுகையில், “கலெக்டராக என் பணியை தான் செய்தேன். இத்தகைய விருதுகள் வழங்குவதன் மூலம், பணியை செய்ய ஊக்கமளிக்கிறது,” என்றார்.

இவரது கணவர் ராம்பிரசாத் மனோகர், பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us