sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உணவு நஞ்சானதால் விபரீதம்:கேரளாவில் 50 பள்ளி மாணவர்கள் திடீர் மயக்கம்

/

உணவு நஞ்சானதால் விபரீதம்:கேரளாவில் 50 பள்ளி மாணவர்கள் திடீர் மயக்கம்

உணவு நஞ்சானதால் விபரீதம்:கேரளாவில் 50 பள்ளி மாணவர்கள் திடீர் மயக்கம்

உணவு நஞ்சானதால் விபரீதம்:கேரளாவில் 50 பள்ளி மாணவர்கள் திடீர் மயக்கம்

1


ADDED : ஜூன் 08, 2025 07:42 PM

Google News

1

ADDED : ஜூன் 08, 2025 07:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சூர்: கேரளாவில் நஞ்சான உணவை சாப்பிட்டு 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு:

திருச்சூர் அருகே உள்ள எருமபெட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்ட உணவை மாணவர்கள் வழக்கம் போல் சாப்பிட்டுள்ளனர்.

இந் நிலையில், அந்த பள்ளியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இன்று ஒரே நேரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் குன்னம்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் அவசர சிகிச்சையில் உள்ளனர்.

இந் நிலையில், ஒரே நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு அல்லது அவர்களுக்கு தரப்பட்ட குடிநீர், இவற்றில் ஏதோ ஒன்று நஞ்சானதால் இந்த நிகழ்வு நடந்திருக்கலாம் என்று முதல்கட்ட தரவுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. இது குறித்து பள்ளியின் தரப்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நிலைமை சுமூகமாகும் வரை தற்காலிகமாக பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், பள்ளி நிர்வாகத்தினரும் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். மாணவர்கள் உடல்நிலை பாதிக்க என்ன காரணம் என்பதை கண்டறிந்து அறிக்கை தருமாறு கலெக்டரும் கேட்டுக் கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us