sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நம் ராணுவ கட்டமைப்புகளை பாகிஸ்தான் நெருங்க முடியாது! சீன ஏவுகணையை சுட்டு வீழ்த்தினோம்; முப்படை அதிகாரிகள் விரிவான விளக்கம்

/

நம் ராணுவ கட்டமைப்புகளை பாகிஸ்தான் நெருங்க முடியாது! சீன ஏவுகணையை சுட்டு வீழ்த்தினோம்; முப்படை அதிகாரிகள் விரிவான விளக்கம்

நம் ராணுவ கட்டமைப்புகளை பாகிஸ்தான் நெருங்க முடியாது! சீன ஏவுகணையை சுட்டு வீழ்த்தினோம்; முப்படை அதிகாரிகள் விரிவான விளக்கம்

நம் ராணுவ கட்டமைப்புகளை பாகிஸ்தான் நெருங்க முடியாது! சீன ஏவுகணையை சுட்டு வீழ்த்தினோம்; முப்படை அதிகாரிகள் விரிவான விளக்கம்


ADDED : மே 13, 2025 03:08 AM

Google News

ADDED : மே 13, 2025 03:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:'நம்மிடம் ஆளில்லா வான்வழி எதிர்ப்பு அமைப்பு, வான் பாதுகாப்பு ஆயுதங்கள், மின்னணு போர் சாதனங்கள் உள்ளிட்ட கலவையான நவீன போர் தளவாடங்கள் இருப்பதால், பாகிஸ்தானால் நம்மை நெருங்க முடியவில்லை' என, நான்கு நாள் போர் நிலவரம் குறித்து நம் முப்படை அதிகாரிகள் நேற்று விளக்கம் அளித்தனர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின், நம் முப்படை அதிகாரிகள் இரண்டாவது முறையாக நேற்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதில் பங்கேற்ற ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய், விமானப் படை நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் துணை அட்மிரல் ஏ.என்.பிரமோத் ஆகியோர் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

'கராச்சியில் தாக்குதல் நடந்தது'

கடற்படை நடவடிக்கைகளுக்கான இயக்குனர் ஜெனரல் துணை அட்மிரல் ஏ.என்.பிரமோத் கூறியதாவது: கராச்சி அருகில் உள்ள பாக்., ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டன. கராச்சியில் இருந்து 35 கி.மீ., தொலைவில் உள்ள மலிர் கன்டோன்மன்டில், தரையில் இருந்து வான் நோக்கி ஏவுகணைகளை ஏவும் தளம் உள்ளிட்ட ராணுவ நிலைகள் தகர்க்கப்பட்டன. கடலில் கடற்படை பிரிவுகளை அச்சுறுத்தும் எந்தவொரு வான்வழி தளங்களையும் கண்டறிந்து, அவற்றை தகர்க்கும் வல்லமை நம் கடற்படைக்கு உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பின், நம் கடற்படை கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. நம் விமானம் தாங்கி கப்பலில் அதிக எண்ணிக்கையிலான மிக் 29 கே போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளன. பல நுாறு கி.மீ.,க்கு முன்பே நம் எதிரிகளின் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை கண்காணித்து தடுத்து நிறுத்த, இவை பெரிய அளவில் உதவின. இவ்வாறு அவர் கூறினார்.



ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி

 நாம் முதலில் நடத்திய தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது மட்டுமே நிகழ்த்தப்பட்டது. ராணுவத்தை நாங்கள் தாக்கவில்லை. தேவையில்லாமல் பயங்கரவாதிகளை பாதுகாக்க பாக்., ராணுவம் களம் இறங்கியது. அதன் பின் தான் நாம் பாக்., ராணுவத்தை தாக்க நிர்ப்பந்திக்கப்பட்டோம். இந்த சண்டையில் பாக்., இழந்தவற்றுக்கு அவர்களே முழு பொறுப்பு.  பாக்., ராணுவம் மிக ஆக்ரோஷமாக தாக்கினாலும், நம் மக்கள் மற்றும் ராணுவ உட்கட்டமைப்புகளுக்கு மிகவும் குறைவான சேதங்கள் மட்டுமே ஏற்பட்டன.  அடுத்தடுத்து ஏவுகணைகள், ட்ரோன்களை பாக்., ஏவினாலும் முப்படைகளின் பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை சுக்குநுாறாக்கின. துருக்கி மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களைத் தான் பாகிஸ்தான் அதிகமாக பயன்படுத்தியது. அந்த ட்ரோன்களால், நம் இலக்கை அடைய முடியவில்லை.  நம் மீது ஏவப்பட்ட சீனாவின், 'பிஎல் - 15' ஏவுகணை வானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டது. அதன் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. நம் வான் தடுப்பு அமைப்புகள், அதை இயக்கும் பயிற்சி பெற்ற வீரர்கள், உள்நாட்டு தயாரிப்பு திறன் ஆகியவை இந்த சண்டையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எதிரிகளிடம் எந்தவிதமான தொழில்நுட்பம் இருந்தாலும் அதை வீழ்த்த நாம் தயாராக உள்ளோம். அதை வார்த்தைகளில் மட்டுமின்றி செயலிலும் நீங்கள் பார்த்தீர்கள்.  தற்போது நடந்தது வேறு வகையான போர். இது தவிர்க்க இயலாதது. மீண்டும் ஒரு போர் வெடித்தால், அது இதைவிட முற்றிலும் வேறு விதமாக இருக்கும்.  பாகிஸ்தானின் கிரானா ஹில்ஸ் பகுதியில் அணு உலை இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து எங்களுக்கு தெரியாது. எவ்வாறாயினும் நாங்கள் கிரானா ஹில்சை தாக்கவில்லை.



லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய்

 நம்மிடம் ஆளில்லா வான்வழி எதிர்ப்பு அமைப்பு, வான் பாதுகாப்பு ஆயுதங்கள், மின்னணு போர் சாதனங்கள் உள்ளிட்ட கலவையான நவீன போர் தளவாடங்கள் உள்ளன. எனவேதான், 9 - 10 தேதிகளில் நம் விமானப்படை தளங்கள், உட்கட்டமைப்புகளை தகர்க்கும் பாகிஸ்தானின் முயற்சியை மிக எளிதாக முறியடிக்க முடிந்தது. பல அடுக்குகள் உடைய பாதுகாப்பு அரண்களை நாம் உருவாக்கினோம். ஆளில்லா வான்வழி அமைப்புகள், பழங்கால வான்வழி பாதுகாப்பு அமைப்பு, நவீன ரக வான் பாதுகாப்பு ஆயுதங்கள், வீரர்கள் தோள் மீது சுமந்து தாக்கும் ஆயுதங்கள் என பல்வேறு அடுக்குகள் உருவாக்கப்பட்டன. இதை தாண்டி பாக்., ராணுவத்தால் நம்மை நெருங்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற முன்னாள் பந்து வீச்சாளர்கள் டென்னிஸ் லில்லி, ஜெப் தாம்சன் எப்படி தங்கள் நாட்டு அணியை அரண் போல பாதுகாத்தனரோ, அதைப் போலவே பல்வேறு அடுக்குகள் அமைத்து நாம் சண்டையிட்டோம். அந்த அடுக்குகளை தாண்டி நம் கட்டமைப்பை நெருங்குவது எளிதல்ல. அப்படியே சில அடுக்குகளில் தப்பினாலும், ஏதாவது ஒன்றில் அவர்கள் வீழ்த்தப்பட்டிருப்பர்.  நம் எல்லைப் பாதுகாப்புப் படையை பாராட்ட விரும்புகிறேன். ஒவ்வொரு கடைசி வீரரும் எங்கள் பணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.  ஜம்மு - காஷ்மீர் மற்றும் அதை சார்ந்த சர்வதேச எல்லைப்பகுதியில் அமைதியான சூழல் காணப்படுகிறது. மக்கள் இரவை நிம்மதியாக கழித்தனர்.








      Dinamalar
      Follow us