sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏர்டெல், ஜியோ உடன் ஸ்டார்லிங்க் ஒப்பந்தத்திற்கு பிரதமர் காரணம்: காங்., கண்டுபிடிப்பு

/

ஏர்டெல், ஜியோ உடன் ஸ்டார்லிங்க் ஒப்பந்தத்திற்கு பிரதமர் காரணம்: காங்., கண்டுபிடிப்பு

ஏர்டெல், ஜியோ உடன் ஸ்டார்லிங்க் ஒப்பந்தத்திற்கு பிரதமர் காரணம்: காங்., கண்டுபிடிப்பு

ஏர்டெல், ஜியோ உடன் ஸ்டார்லிங்க் ஒப்பந்தத்திற்கு பிரதமர் காரணம்: காங்., கண்டுபிடிப்பு

22


ADDED : மார் 13, 2025 04:47 PM

Google News

22

ADDED : மார் 13, 2025 04:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுடன் ஸ்டார்லிங்க் நிறுவனம் கூட்டு சேர பிரதமர் மோடி தான் காரணம் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

செயற்கைக்கோள் வழி அதிவேக இணையதள சேவை வழங்க ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களுடன், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் ஒப்பந்தம் போட்டு உள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: இரண்டு நிறுவனங்களும், ஸ்டார்லிங்க்கின் இந்திய வருகையை எதிர்த்தன. இதற்கு வழக்கமான அலைக்கற்றை ஏலம் போல அல்லாமல், நிர்வாக ரீதியான ஒப்புதலை பெற, மத்திய அரசிடம் எலான் மஸ்க் விண்ணப்பித்ததே காரணம்.

எலான் மஸ்க் வாயிலாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் அமைதியை வாங்க விரும்பிய பிரதமர் மோடி, ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஸ்டார்லிங்க் உடன் ஒப்பந்தம் போட ஏற்பாடு செய்தார் என்பது தெளிவாக தெரிகிறது.

இந்தியா வரியை குறைத்து விட்டதாக டிரம்ப் தினமும் கூறி வருகிறார். இந்தியா எதற்கு ஒப்புக் கொண்டது. எதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்பது பற்றி எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை. எலான் மஸ்க் மகிழ்ச்சியாக இருந்தால், அதிபர் டிரம்ப் மகிழ்ச்சியாக இருப்பார் என பிரதமர் நம்புகிறார். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us