sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

10வது ஆண்டில் டிஜிட்டல் இந்தியா; வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என பிரதமர் மோடி பெருமிதம்

/

10வது ஆண்டில் டிஜிட்டல் இந்தியா; வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என பிரதமர் மோடி பெருமிதம்

10வது ஆண்டில் டிஜிட்டல் இந்தியா; வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என பிரதமர் மோடி பெருமிதம்

10வது ஆண்டில் டிஜிட்டல் இந்தியா; வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என பிரதமர் மோடி பெருமிதம்

6


ADDED : ஜூலை 01, 2025 11:39 AM

Google News

6

ADDED : ஜூலை 01, 2025 11:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில், இந்நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறி உள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 1) டிஜிட்டல் இந்தியா திட்டம் துவங்கப்பட்டது. பிரதமர் மோடியால் துவங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தின் நோக்கம் என்பது, நாட்டை டிஜிட்டல் துறையில் ஆற்றல் மிக்க ஒன்றாகவும், அறிவுசார் சமூகமாகவும் மாற்ற வேண்டும் என்பதே ஆகும்.

10 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து, இந்த நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் கூறி உள்ளதாவது;

நாம் கொண்டாடும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நமது நாட்டை டிஜிட்டல் ரீதியாக அதிகாரம் பெற்ற மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய சமூகமாக மாற்றுவதற்கான ஒரு முயற்சியாக டிஜிட்டல் இந்தியா தொடங்கியது.

ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, எண்ணற்ற உயிர்களைத் தொட்டு, அதிகாரமளித்தலின் புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்த ஒரு பயணத்திற்கு நாம் சாட்சியாக நிற்கிறோம்.

140 கோடி இந்தியர்களின் கூட்டு உறுதியால் இயக்கப்படும் டிஜிட்டல் கட்டணங்களில் இந்தியா பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளும் இந்த முயற்சியால் பயனடைந்துள்ளன.

இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us