ADDED : செப் 24, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்:கேரள மாநிலம், மலப்புரத்தை சேர்ந்த 8 வயது சிறுமியை அவரது உறவினரான, 53 வயது நபர், தன் வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். வாழக்காடு போலீசார், போக்சோவில் அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு, மஞ்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அந்த நபருக்கு, 97 ஆண்டுகள் சிறை விதித்து, நீதிபதி ஏ.எம்.அஷ்ரப் தீர்ப்பளித்தார்.