sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு

/

பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு

பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு

பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு


ADDED : மே 13, 2025 10:02 AM

Google News

ADDED : மே 13, 2025 10:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் மோதல் குறித்து விவாதம் நடத்த பார்லிமென்ட் சிறப்புக் கூட்டம் நடத்த தேவையில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறி உள்ளார்.

பஹல்காம் சம்பத்தை அடுத்து பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியபடி இயங்கும் பயங்கரவாதிகளின் நிலைகள் முற்றிலும் அழிக்கப்பட்டன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்கும் பொருட்டு இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளும் கிடைத்தன. தற்போது இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது.

இந்தியா, பாக். மோதல் குறித்து விவாதிக்க பார்லிமென்ட் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க பார்லிமென்ட் சிறப்புக் கூட்டம் நடத்த தேவையில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டணி கட்சியின் தலைவரான சரத் பவர் இவ்வாறு கூறியிருப்பது, கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லை என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இது குறித்து சரத் பவர் மேலும் கூறியதாவது;

பார்லி. சிறப்புக் கூட்டத்தை கூட்டுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மிகவும் உணர்ச்சிகரமான, ரகசியம் பொதிந்த பிரச்னை. அப்படித்தான் இது போன்ற சில தருணங்களில் சில விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவரான சரத்பவார், மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us