sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விமானத்தில் ஏசி இல்லாமல் ஒரு மணி நேரம் வெயிலில் அவதிப்பட்ட பயணிகள்

/

விமானத்தில் ஏசி இல்லாமல் ஒரு மணி நேரம் வெயிலில் அவதிப்பட்ட பயணிகள்

விமானத்தில் ஏசி இல்லாமல் ஒரு மணி நேரம் வெயிலில் அவதிப்பட்ட பயணிகள்

விமானத்தில் ஏசி இல்லாமல் ஒரு மணி நேரம் வெயிலில் அவதிப்பட்ட பயணிகள்

7


ADDED : ஜூன் 19, 2024 04:14 PM

Google News

ADDED : ஜூன் 19, 2024 04:14 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் இருந்து கிளம்ப வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏசி போடாததால், பயணிகள் ஒரு மணி நேரம் கடும் வெயிலில் அவதிப்பட்டனர். தங்கள் கைகளில் இருந்த புத்தகங்களை வைத்து விசிறி கொண்டனர்.

வட மாநிலங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசுவதால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அதில் தேசியத் தலைநகர் டில்லியும் அடங்கும். இங்கும் மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

இந்நிலையில், டில்லியில் இருந்து பீஹாரின் தர்பங்கா என்ற நகருக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் செல்லவிருந்தது. பயணிகள் அனைவரும் ஏறி அமர்ந்த நிலையில், ஒரு மணி நேரம் கடந்தும் விமானம் கிளம்பவில்லை. அதேநேரத்தில் ஏசியும் இயக்கப்படவில்லை. இதனால், விமானத்தில் அமர்ந்து இருந்த பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். வியர்வையில் நனைந்தபடி இருந்த அவர்கள், தங்கள் கைகளில் இருந்த புத்தகத்தையே விசிறியாக மாற்றி வீசிக் கொண்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. நெட்டிசன்கள், விமான நிறுவனத்தை கண்டபடி திட்டி தீர்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us