sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விடுதலை புலிகளுக்கு நிதி: ஈ.டி., வளையத்தில் இலங்கை பெண்

/

விடுதலை புலிகளுக்கு நிதி: ஈ.டி., வளையத்தில் இலங்கை பெண்

விடுதலை புலிகளுக்கு நிதி: ஈ.டி., வளையத்தில் இலங்கை பெண்

விடுதலை புலிகளுக்கு நிதி: ஈ.டி., வளையத்தில் இலங்கை பெண்


ADDED : செப் 22, 2025 01:05 AM

Google News

ADDED : செப் 22, 2025 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, நிதி திரட்ட முயன்ற வழக்கில் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணிடம், இரண்டு நாட்கள் ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது.

இலங்கையை சேர்ந்தவர் லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா, 45. இவர், போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி, சென்னை விமான நிலையத்தில் இருந்து, கர்நாடக மாநிலம், பெங்களூரு செல்ல முயன்றபோது, 2021ல், தமிழக 'கியூ' பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின், அவரது கூட்டாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப் பட்டனர்.

இவர்களின் பின்னணியில், ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் பதுங்கி இருக்கும், விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த உமாகாந்தன் இருப்பது தெரிய வந்தது.

இதனால், என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அவர்களை கைது செய்து, காவலில் எடுத்து விசாரித்தனர்.

அப்போது, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள வங்கி கணக்கில் இருந்து, விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவருக்கு, லட்சுமணன் மேரி பிரான்சிகா, 42 கோடி ரூபாய் அனுப்ப முயன்றதும், அதற்கு இவரின் கூட்டாளிகள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

தற்போது, லட்சுமணன் மேரி பிரான்சிகா உள்ளிட்டோரிடம், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள், இரண்டு நாட்கள் விசாரிக்க உள்ளனர். இதற்காக நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us