sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டி.எம்.ஆர்.சி., வழியில் டி.டி.சி., ரூ.2,600 கோடி திரட்ட திட்டம்

/

டி.எம்.ஆர்.சி., வழியில் டி.டி.சி., ரூ.2,600 கோடி திரட்ட திட்டம்

டி.எம்.ஆர்.சி., வழியில் டி.டி.சி., ரூ.2,600 கோடி திரட்ட திட்டம்

டி.எம்.ஆர்.சி., வழியில் டி.டி.சி., ரூ.2,600 கோடி திரட்ட திட்டம்


ADDED : மே 13, 2025 10:14 PM

Google News

ADDED : மே 13, 2025 10:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:பண்டா பகதுார் மார்க் மற்றும் சுக்தேவ் விஹார் ஆகிய இரு பேருந்து நிலைய வளாகங்களில் வணிக நடவடிக்கைகளை அனுமதிப்பதன் மூலம் ஏறக்குறைய 2,600 கோடி ரூபாய் ஈட்டுவதற்கு டி.டி.சி., எனும் டில்லி போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு மாநில அரசு கடந்த வாரம் அனுமதி அளித்தது. திரட்டப்படும் நிதியை கொண்டு, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த டி.டி.சி., திட்டமிடுகிறது.

இத்தகைய தொடர் முயற்சிகளார் தன்னுடைய வருவாயை அதிகரிக்கவும் அது திட்டமிடுகிறது.

நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், பார்க்கிங் திறனை அதிகரித்தல், பல நிலை கிடங்குகளை உருவாக்குதல், குடியிருப்பு காலனிகளை மறுசீரமைத்தல், உள்கட்டமைப்பை மேம்படுத்த அதன் கிடங்குகள் மற்றும் முனையங்களை வணிகமயமாக்குதல் ஆகியவை இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பொறியியல் திட்டங்கள் இந்தியா லிமிடெட் பகிர்ந்து கொண்ட மதிப்பீடுகளின்படி, பண்டா பகதுார் மார்க் பணிமனைத் திட்டம் 1,858 கோடி ரூபாயையும் சுக்தேவ் விஹார் திட்டம் 758 கோடி ரூபாயையும் வருவாயாக ஈட்டக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

தன்னுடைய சொத்துக்களில் இருந்து நிதி வருவாயை பெருக்கும் டி.எம்.ஆர்.சி., எனும் டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனை போன்று டி.டி.சி.,யும் திட்டமிடுகிறது.






      Dinamalar
      Follow us