sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தூர் - புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் கடும் அவதி

/

இந்தூர் - புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் கடும் அவதி

இந்தூர் - புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் கடும் அவதி

இந்தூர் - புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் கடும் அவதி

8


UPDATED : ஜூன் 23, 2025 01:47 PM

ADDED : ஜூன் 23, 2025 01:26 PM

Google News

8

UPDATED : ஜூன் 23, 2025 01:47 PM ADDED : ஜூன் 23, 2025 01:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தூர் - புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து புவனேஸ்வருக்கு (ஒடிசா மாநிலம்) செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் (6E 6332) இன்று (ஜூன் 23) காலை 9.00 மணிக்கு 140 பயணிகளுடன் புறப்பட தயாரானது. விமானம் புறப்படுவதற்காக, ஓடுபாதையை நோக்கி சென்று கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.

இதையடுத்து விமானம் புறப்படாமல் நிறுத்தப்பட்டது. இயந்திரத்தில் பிரச்னை ஏற்பட்டதால், விமானம் தாமதமாக செல்லும் என்று, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் பழுது பார்க்கப்பட்டு, காலை 10.16 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானம் சரியான நேரத்தில் புறப்படாமல் தாமதம் ஏற்பட்டதால், பயணியர் விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால், பயணிகள் கடும் அவதிகள் அடைந்தனர். சமீப காலமாக, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு அடிக்கடி நிகழ்ந்து வருவதால், பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோளாறு!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் (IX-195) கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. காலை 5.30 மணிக்கு புறப்பட திட்டமிடப்படிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.
விமானி கடைசி நேரத்தில், தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. துபாய் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.








      Dinamalar
      Follow us