sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வருகிறது தேஜஸ் விமானம்; ஜூனுக்குள் ஒப்படைக்க உறுதி

/

வருகிறது தேஜஸ் விமானம்; ஜூனுக்குள் ஒப்படைக்க உறுதி

வருகிறது தேஜஸ் விமானம்; ஜூனுக்குள் ஒப்படைக்க உறுதி

வருகிறது தேஜஸ் விமானம்; ஜூனுக்குள் ஒப்படைக்க உறுதி

7


ADDED : ஜூன் 04, 2025 02:28 AM

Google News

7

ADDED : ஜூன் 04, 2025 02:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'அதிநவீன தொழில்நுட்பங்களுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, 'தேஜஸ் மார்க் - 1ஏ' இலகுரக போர் விமானம் இம்மாத இறுதிக்குள் நம் விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும்' என ஹெச்.ஏ.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது.

நம் ராணுவத்துக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய தேஜஸ் மார்க் 1ஏ போர் விமானங்களை தயாரிக்க கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்த ஹெச்.ஏ.எல்., எனப்படும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன், 2021ல் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.

மொத்தம், 48,000 கோடி ரூபாய் மதிப்பில், 83 போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி, 2024, மார்ச் 31க்குள் நம் விமானப்படையிடம் முதல் விமானத்தை ஒப்படைக்க திட்டமிடப்பட்டது.

இந்த விமானத்தின் இன்ஜினை அமெரிக்காவின், 'ஜெனரல் எலக்ட்ரிக் ஏரோஸ்பேஸ்' நிறுவனம் வடிவமைத்து தர ஒப்பந்தம் மேற்கொண்டது.

இதற்கிடையே, புதிய இன்ஜின்களை ஒப்படைப்பதில் அந்நிறுவனம் தொடர்ந்து காலம் தாழ்த்தியதால், இதுவரை நம் விமானப்படையிடம் தேஜஸ் போர் விமானங்களை ஹெச்.ஏ.எல்., நிறுவனம் ஒப்படைக்கவில்லை.

இதை, நம் விமானப்படையின் தலைமை தளபதி அமர் பிரீத் சிங் வெளிப்படையாகவே பல முறை விமர்சித்தார். சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர், இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசினார்.

இந்நிலையில், மஹாராஷ்டிராவின் நாசிக்கில் அமைந்துள்ள ஹெச்.ஏ.எல்., நிறுவனத்தின் உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்பட்ட முதல் தேஜஸ் மார்க் - 1ஏ போர் விமானத்தை, இம்மாத இறுதிக்குள் விமானப்படையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நிறுவனம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us