sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தெலுங்கானாவில் நக்சலைட்டுகள் 20 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

/

தெலுங்கானாவில் நக்சலைட்டுகள் 20 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

தெலுங்கானாவில் நக்சலைட்டுகள் 20 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

தெலுங்கானாவில் நக்சலைட்டுகள் 20 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் மீட்பு


ADDED : மே 18, 2025 06:56 AM

Google News

ADDED : மே 18, 2025 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்: தெலுங்கானாவில் நக்சலைட்டுகள் 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெடி மருந்துகள், ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லையில், நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்படி, தெலுங்கானா மாநிலம், முலுகு மாவட்டத்தில் வாகன சோதனைகள் மற்றும் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது நக்சலைட்டுகள் 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெடி மருந்துகள் மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் நக்சலைட்டுகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லையில் மாவோயிஸ்ட் கோட்டைகளை அகற்றுவதற்காக, 21 நாட்கள் ஒருங்கிணைந்த முயற்சியாக நடத்தப்பட்ட ''ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்'' வெற்றிக்குப் பிறகு இந்தக் கைதுகள் நடந்துள்ளன.






      Dinamalar
      Follow us