sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'அமெரிக்காவின் வரி விதிப்பால் 25,000 கோடி ரூபாய் இழப்பு'

/

'அமெரிக்காவின் வரி விதிப்பால் 25,000 கோடி ரூபாய் இழப்பு'

'அமெரிக்காவின் வரி விதிப்பால் 25,000 கோடி ரூபாய் இழப்பு'

'அமெரிக்காவின் வரி விதிப்பால் 25,000 கோடி ரூபாய் இழப்பு'


ADDED : செப் 16, 2025 02:33 AM

Google News

ADDED : செப் 16, 2025 02:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி : 'அமெரிக்காவின் வரி விதிப்பால், ஆந்திராவில் இறால் ஏற்றுமதியில், 25,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது' என, அம்மாநில முதல்வர் சந்திர பாபு நாயுடு கவலை தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், மத்திய மீன்வளத் துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதி உள்ளார்.

அதில், 'நாட்டின் இறால் ஏற்றுமதியில் 80 சதவீதத்தையும், கடல்சார் ஏற்றுமதியில் 34 சதவீதத்தையும் ஆந்திரா கொண்டுள்ளது. தற்போது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளதால், மாநிலத்தின் இறால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

'மேலும், 50 சதவீதம் வரை ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், 25,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி கட்ட மத்திய அரசு உதவ வேண்டும் என, அவர் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us