sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேடப்பட்ட கொள்ளையன் நள்ளிரவில் சுட்டுப்பிடிப்பு

/

தேடப்பட்ட கொள்ளையன் நள்ளிரவில் சுட்டுப்பிடிப்பு

தேடப்பட்ட கொள்ளையன் நள்ளிரவில் சுட்டுப்பிடிப்பு

தேடப்பட்ட கொள்ளையன் நள்ளிரவில் சுட்டுப்பிடிப்பு


ADDED : செப் 24, 2025 12:18 AM

Google News

ADDED : செப் 24, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:தேடப்பட்ட கொள்ளையன் கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் கைது செய்யப்பட்டார்.

தென்கிழக்கு டில்லி அமர் காலனியில், 20ம் தேதி நடந்த கத்திக்குத்து- மற்றும் கொள்ளைச் சம்பவத்தில், சாகர் என்ற மாயாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

காலிந்தி கஞ்ச் அருகே மாயா பதுங்கி இருப்பதாக போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, டில்லி மாநகரப் போலீசின் சிறப்புப் படையினர் தேடுதல் வேட்டையை துவக்கினர். சரிதா விஹார் மேம்பாலத்தில் நேற்று முன் தினம் இரவு 11:45 மணிக்கு ஸ்கூட்டரில் வந்த மாயாவை மறித்தனர்.

ஆனால், ஸ்கூட்டரை விட்டு இறங்கி ஓடிய மாயா, போலீசை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத் துவங்கினார். போலீஸ் கொடுத்த பதிலடியில் மாயாவின் வலது காலில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். சிறப்புப் படையினர் சுற்றிவளைத்து மாயாவை கைது செய்து, கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். சப்தர்ஜங் மருத்துவமனையில் மாயாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொள்ளை, வழிப்பறி மற்றும் மிரட்டி பணம் பறித்தல், போலீஸ் மீது தாக்குதல் என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் மாயா மீது நிலுவையில் உள்ளன. அவரது கூட்டாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us