sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தொகுதி மறுசீரமைப்பை ஏற்க மாட்டோம்; தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

/

தொகுதி மறுசீரமைப்பை ஏற்க மாட்டோம்; தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

தொகுதி மறுசீரமைப்பை ஏற்க மாட்டோம்; தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

தொகுதி மறுசீரமைப்பை ஏற்க மாட்டோம்; தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

8


ADDED : மார் 13, 2025 01:02 PM

Google News

8

ADDED : மார் 13, 2025 01:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, டில்லியில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தமிழக அரசு குழு சந்தித்து மார்ச் 22ல் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.

லோக்சபா தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை, மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு குறைவு உள்ளிட்ட விவகாரங்களை தேசிய அளவில் எடுத்து செல்வதற்கு, தென் மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை இணைத்து, கூட்டு நடவடிக்கை குழு அமைத்து, அடுத்தகட்ட நடவடிக்கையை தொடர, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பிற மாநில முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து, கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு அழைக்க, அமைச்சர்கள், எம்.பி.,க்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று டில்லியில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தமிழக அரசு குழு சந்தித்து மார்ச் 22ல் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.

அமைச்சர் நேரு, தி.மு.க., எம்.பி., கனிமொழி ஆகியோர் அழைப்பு விடுத்தனர். கட்சி மேலிட அனுமதி பெற்று தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பேன் என ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

பங்கேற்பேன்

பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: தொகுதி மறுவரையறையை ஏற்க முடியாது. கட்சி மேலிட அனுமதி பெற்று தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பேன். தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களுக்கு எதிரானது.

வாழ்த்துகள்

முக்கியமான விவகாரத்தை கையில் எடுத்துள்ள தமிழக அரசுக்கு வாழ்த்துகள். எந்த காரணத்தை கொண்டும் தொகுதி மறுசீரமைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில், பா.ஜ., தென் மாநிலங்களுக்கு எதிராக சதி செய்கிறது. இந்தியாவுக்கு அதிகமான வரி வருவாயை தென் மாநிலங்கள் வழங்கி வருகின்றன.

அதிக வரி

வட மாநிலங்களை விட தென் மாநிலங்கள் அதிக வரியை செலுத்துகின்றன. தென் மாநிலங்களில் பா.ஜ.,வை வளர அனுமதிக்காததால், இத்தகைய முயற்சியை பா.ஜ., மேற்கொண்டுள்ளது. நடக்க போவது தொகுதி மறுசீரமைப்பு அல்ல. இது தென் இந்தியாவின் தொகுதிகளைக் குறைக்கும் நடவடிக்கை ஆகும். இவ்வாறு ரேவந்த் ரெட்டி கூறினார்.






      Dinamalar
      Follow us