பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் உலக தலைவர்கள் யார் யார்? முழு பட்டியல்
பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் உலக தலைவர்கள் யார் யார்? முழு பட்டியல்
ADDED : ஜூன் 08, 2024 12:52 PM

புதுடில்லி: பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் உலக தலைவர்கள் குறித்த பட்டியல் மற்றும் அவர்கள் வருகை குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது.
நாளை(ஜூன்9) இரவு 7:15 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், மோடி தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் ஆக பதவியேற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். முன்னாள் பிரதமர் நேருக்கு பிறகு, தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்கும் பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைக்க உள்ளது. விழாவில் பங்கேற்க பல நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், விழாவில் பங்கேற்க டில்லி வர உள்ள உலக தலைவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
இதன்படி பதவியேற்பு விழாவில்
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே
மாலத்தீவு அதிபர் முகமது முயிசு
சீஷெல்ஸ் துணை அதிபர் அஹமது அபிப்
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா
மொரிஷீயஸ் பிரதமர் பிரவின் குமார் ஜெகநாத்
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா
பூடான் பிரதமர் ஷெரீங் டோப்கே ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதன்படி, வங்கதேச பிரதமரும், சீஷெல்ஸ் துணை அதிபரும் இன்று டில்லி வருகின்றனர்.
மொரிஷீயஸ், நேபாள, பூடான் பிரதமர்கள், இலங்கை மற்றும் மாலத்தீவு அதிபர்கள் நாளை டில்லி வர உள்ளனர்.
உலகத் தலைவர்கள் வருகையை முன்னிட்டு டில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய ஓட்டல்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். ஓட்டலில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு செல்ல தனியாக வழியை போலீசார் ஏற்படுத்தி உள்ளனர்.