sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

/

ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

5


ADDED : ஜூன் 18, 2025 11:46 AM

Google News

5

ADDED : ஜூன் 18, 2025 11:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பான விளக்கத்தை, நாளை (ஜூன் 19) தெரிவிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் தனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, ஜெயராம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இரவே, மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என, ஜெயராம்ன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முறையிடப்பட்டது.அதை ஏற்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் மன்மோகன் அமர்வு, இன்று (ஜூன் 18) விசாரித்தது.

அப்போது ஜெயராம் தரப்பில், ''விசாரணைக்கு ஒத்துழைப்பால் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும். வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத தன்னை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது'' என வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ஏ.டி.ஜி.பி., ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பினர். சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பான விளக்கத்தை நாளை தெரிவிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர். மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்து, தமிழக அரசு நாளை விளக்கம் அளித்த பிறகு, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்யும் என தெரிகிறது.






      Dinamalar
      Follow us