sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சாக்கு மூட்டையில் பெண் சடலம் கணவர், கள்ளக்காதலி கைது

/

சாக்கு மூட்டையில் பெண் சடலம் கணவர், கள்ளக்காதலி கைது

சாக்கு மூட்டையில் பெண் சடலம் கணவர், கள்ளக்காதலி கைது

சாக்கு மூட்டையில் பெண் சடலம் கணவர், கள்ளக்காதலி கைது


ADDED : ஜன 26, 2024 07:01 AM

Google News

ADDED : ஜன 26, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாவணகெரே; தாவணகெரேவின், கொடகனுாரு அருகில் உள்ள, தும்பி ஏரியில் மூன்று நாட்களுக்கு முன்பு, சாக்கு மூட்டை மிதந்தது.

இதை கண்ட கிராமத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், சாக்கு மூட்டையை நீரில் இருந்து எடுத்து சோதனையிட்டபோது, பெண்ணின் உடல் இருப்பது தெரிந்தது.

விசாரணை நடத்தியபோது, அந்த பெண் காவ்யா என்பதும், அவரை அவரது கணவரே கொலை செய்ததும் தெரியவந்தது.

கொடகனுார் கிராமத்தில் வசிப்பவர் சச்சின், 24. இவரது மனைவி காவ்யா, 21. சில ஆண்டுகளுக்கு முன்பு, இவர்களுக்கு திருமணம் நடந்தது. மனைவி இருந்தபோதும், அதே கிராமத்தை சேர்ந்த சைத்ரா, 23, என்பவருடன், சச்சின் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதையறிந்த காவ்யா, கணவரை கண்டித்து, சண்டை போட்டார்.

தங்களின் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருக்கும் அவரை கொலை செய்ய சச்சினும், சைத்ராவும் திட்டமிட்டனர். அதன்படி காவ்யாவை கொலை செய்து, உடலை சாக்கு மூட்டையில் போட்டு, கிராமத்தின் அருகில் உள்ள ஏரியில் வீசியது, விசாரணையில் தெரிந்தது.

கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us