sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

அமைச்சர் வேலுவுக்கு நோட்டு மாலை அணிவிப்பு; விஜய் அதிருப்தியால் மா.செ., கேட்டார் மன்னிப்பு

/

அமைச்சர் வேலுவுக்கு நோட்டு மாலை அணிவிப்பு; விஜய் அதிருப்தியால் மா.செ., கேட்டார் மன்னிப்பு

அமைச்சர் வேலுவுக்கு நோட்டு மாலை அணிவிப்பு; விஜய் அதிருப்தியால் மா.செ., கேட்டார் மன்னிப்பு

அமைச்சர் வேலுவுக்கு நோட்டு மாலை அணிவிப்பு; விஜய் அதிருப்தியால் மா.செ., கேட்டார் மன்னிப்பு

10


UPDATED : ஜூன் 11, 2025 04:43 AM

ADDED : ஜூன் 11, 2025 03:19 AM

Google News

10

UPDATED : ஜூன் 11, 2025 04:43 AM ADDED : ஜூன் 11, 2025 03:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: தமிழக வெற்றிக் கழக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலர் பாரதிதாசன், சமீபத்தில் வீடு கட்டி குடியேறினார். அதற்காக, கடந்த 8ல், கிரஹப்பிரவேச விழா நடத்தினார்.

விழாவுக்கு அமைச்சர் வேலுவுக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தார். அதை ஏற்று, விழாவுக்கு வந்தார் அமைச்சர் வேலு.

அப்போது, அமைச்சரை, பாரதிதாசன் 20 ரூபாய் நோட்டு மாலை அணிவித்து வரவேற்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

தி.மு.க.,வையும் தமிழக அரசையும் மிகக் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்யும் நடிகர் விஜய் கட்சியைச் சேர்ந்த மா.செ., ஒருவர், தி.மு.க., அமைச்சரை வீட்டுக்கு வரவழைத்து, நோட்டு மாலை அணிவித்து மகிழ்வதா எனக் கேட்டு, கட்சியில் இருக்கும் சிலர், த.வெ.க., தலைவர் நடிகர் விஜய்க்கு கடிதம் அனுப்பினர்.

கட்சியினர் சிலரும், இந்த விவகாரத்தை தலைமை வரை கொண்டு சென்றனர். உடனே, கட்சித் தலைமை இது தொடர்பாக, பாரதிதாசனிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இதையடுத்து, த.வெ.க., மாவட்டச் செயலர் பாரதிதாசன், கட்சித் தலைமைக்கு மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.

அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:


திருவண்ணாமலையில் நான் கட்டியிருக்கும் புதிய வீட்டு கிரஹபிரவேசம், கடந்த 8ல், நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, நண்பர்கள், கட்சியினர் உள்ளிட்டோரை அழைத்தது போல், என்னுடைய குடும்ப நண்பரான அமைச்சர் வேலுவையும் அழைத்தேன். அவரும் வருகை தந்தார்.

அமைச்சர் என்பதால், அவருக்கு மரியாதை செய்யும் வகையில் 20 ரூபாய் நோட்டு மாலையும், மலர் மாலையும் அணிவித்தேன். தவறுதலாக நடந்த விஷயம் அது.

அச்செயலுக்காக வருந்துகிறேன். அதற்காக, தலைவரிடம் மன்னிப்பு கோருகிறேன். வரும் காலங்களில், இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு மாற்று கட்சியினரை அழைக்க மாட்டேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us