தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொலை வழக்கில் ஜாமினில் வந்து தலைமறைவானவர் கைது

கொலை வழக்கில் ஜாமினில் வந்து தலைமறைவானவர் கைது

கொலை வழக்கில் ஜாமினில் வந்து தலைமறைவானவர் கைது


ADDED : ஏப் 09, 2024 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2024 04:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திருபுவனை வேலழகன் கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்து 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திருபுவனை சின்னபேட் வேலழகன், 42; என்.ஆர்.காங். பிரமுகர். இவர் கடந்த 2017 ஏப். 19 ம் தேதி சன்னியாசிக்குப்பத்தில் கொலை செய்யப்பட்டார்.

திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன்பிறகு கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டது. கார்த்திகேயன் (எ) ரமேஷ், 42; சிவராமன், செங்கதிரவன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலை வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு ஜாமினில் வெளியே வந்த ரமேஷ் தலைமறைவானார். நீதிமன்ற வழக்கு விசாரணையிலும் ஆஜராகாமல் இருந்ததால் பிடிவராண்ட் பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ரமேஷ், சென்னை கொளத்துாரில் தங்கி ஆட்டோ ஓட்டி வந்தது தெரியவந்தது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரமேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us