sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஜி.எஸ்.டி., தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

/

ஜி.எஸ்.டி., தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

ஜி.எஸ்.டி., தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

ஜி.எஸ்.டி., தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்


ADDED : ஜூன் 30, 2024 04:53 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : ஜி.எஸ்.டி., தினத்தையொட்டி இன்று விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடக்கிறது.

நாடு முழுதும் ஜி.எஸ்.டி., வரித் திட்டம், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி அமலாக்கப்பட்டதை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜூலை 17ம் தேதி ஜி.எஸ்.டி., தினம் கடைபிடிக்கப்படுகிறது. மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் கலால் வரி புதுச்சேரி ஆணையர் அலுவலகம் சார்பில் வரும் 1ம் தேதி இந்தாண்டிற்கான ஜி.எஸ்.டி., தின விழா கொண்டாடப்படுவதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி ஒருங்கிணைத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தின் ஜி.எஸ்.டி.,யின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தியது. இன்று 30ம் தேதி காலை 7:00 மணிக்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடற்கரை சாலையில் உள்ள மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் கலால் வரி ஆணையர் அலுவலகத்தில் துவங்கும் ஊர்வலத்திற்கு ஆணையர் பத்மஸ்ரீ தலைமை தாங்குகிறார். கூடுதல் ஆணையர் பிரஷாந்த் குமார் காக்கர்லா கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைக்கிறார். நகர முக்கிய வீதிகள் வழியாக கோரிமேடு நுழைவு வாயில் வரை இந்த சைக்கிள் ஊர்வலம் நடக்கிறது.

ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம், சுரேந்தர், குமரேசன், ஆய்வாளர் கபில் கந்தல்வால் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us