sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு 

/

அரசு பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு 

அரசு பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு 

அரசு பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு 


ADDED : மார் 14, 2025 04:27 AM

Google News

ADDED : மார் 14, 2025 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு முதல்வர் ரங்கசாமி பதில் அளித்து பேசியதாவது:

கவர்னர் உரையின்போது பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் அளித்ததை பாராட்டியுள்ளார். மத்திய குழு வருகையின் போது புயல் பாதிப்பே தெரியாத அளவிற்கு அரசு துரிதமாக செயல்பட்டு மீட்பு பணிகளை செய்தது. மாநில வருவாயும், தனி நபர் வருமானமும் அதிகரித்துள்ளது.

மாநிலம் வணிகம் ரீதியாகவும் வளர்ந்துள்ளது. இதனை ஜி.எஸ்.டி., வரி வாயிலாக நாம் தெரிந்து கொள்ள முடியும். இந்த சூழ்நிலையில் இங்குள்ள பெரிய வியாபார நிறுவனங்கள் வெளியே சென்றுவிட்டதாக எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர். இது உண்மை தான். அவர்கள் முழுவதுமாக சென்றுவிடவில்லை. வெளியே போய் தங்களது கடைகளை விரிவாக்கி கொண்டுள்ளனர். இங்கேயும் வணிகம் செய்கின்றனர்.

ஜி.எஸ்.டி., வரி நமக்கு வந்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசிடமிருந்து கவர்னர் நிறைய திட்டங்களை கேட்டு பெறக்கூடிய வாய்ப்பு நமக்கு இருக்கிறது.

கவர்னர் புதுச்சேரியின் வளர்ச்சிக்கு தொலைநோக்கு பார்வை வைத்துள்ளார். புதுச்சேரிக்கு கடன் தள்ளுபடி, நிதி கமிஷனில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கவர்னரை சந்தித்தபோது தெரிவித்தேன்.

அவர் இன்னும் சில நாட்களில் குஜராத் செல்ல இருக்கிறார். அங்கு வரும் பிரதமர், நிதி அமைச்சரை சந்தித்து பேச உள்ளார். எனவே, புதுச்சேரி மாநில கோரிக்கையை பேசி பெற்று தருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

10 ஆயிரம் அரசு காலிபணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் 3 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இன்னும் 2,448 அரசு பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்பதே அரசின் எண்ணம். ஆனால் நீதிமன்ற வழக்கு உள்பட பல்வேறு காரணங்களால் விரைந்து நிரப்ப முடியவில்லை. அரசு பணியிடங்களை எவ்வளவு விரைவாக நிரப்பி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பதே அரசின் எண்ணம்.

ஆசிரியர் பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும். பதவி உயர்வு கொடுக்கப்பட்டு அதன் பிறகு காலியாகும் இடங்கள் ஏற்கனவே பணியாற்றியவர்களை கொண்டு நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கப்படும். கரசூர் தொழிற்பேட்டை இடம் பிப்டிக் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முழுமையான திட்ட அறிக்கை தயாரித்து, புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.






      Dinamalar
      Follow us