: மரங்களை பராமரிக்க வேண்டும்
ஏர்போர்ட் சாலை தாகூர் நகரில் உள்ள மரங்கள் பராமரிக்காமல் இருந்து வருகிறது. சாய்ராம், புதுச்சேரி.
வாகனங்கள் நிறுத்துவதால் இடையூறு
நெல்லித்தோப்பு சிக்னல் அருகில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் வாசலில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. ரவீந்தரன், நெல்லித்தோப்பு.
டவுன் பஸ் தேவை
தேங்காய்த்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சங்கர், தேங்காய்த்திட்டு.
போக்குவரத்து நெரிசல்
மரப்பாலம் சந்திப்பில், வாகனங்கள் நிறுத்தி விட்டு கடைகளுக்கு செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மனோகர். புதுச்சேரி.
தெரு நாய்கள் தொல்லை
மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். நீலகண்டன், மேட்டுப்பாளையம். ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்
ராஜ்பவன் ஈஸ்வரன் கோவில் – காமாட்சியம்மன் கோவில் தெரு சந்திப்பில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. ராஜ், புதுச்சேரி.

