ADDED : செப் 16, 2024 05:52 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையில் செயல்படும் அடல் இன்குபேஷன் சென்டரில் நடந்த, ட்ரோன் தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.
அடல் இன்குபேஷன் சென்டர் தலைமை நிர்வாக அதிகாரி ராஜகுமார், ட்ரோன் தொழில்நுட்பத்தின் முறை மற்றும் எதிர்கால வளர்ச்சிகள் குறித்து பேசினார்.
ஆராய்ச்சி பொறியாளர் தர்ஷன் ட்ரோன்களை வடிவமைத்து பறக்கச் செய்தார். அடல் இன்குபேஷன் சென்டர் தலைமைச் செயல் அதிகாரி விஷ்ணு வரதன் இப்பயிற்சி தொடர்ந்து நடத்தப்பட்டு, பங்கேற்பாளர்களின் திறன்களை மேம்படுத்த உதவும் என்றார். பயிற்சி கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ஏற்பாடுகளை பட்டதாரி பொறியாளர் ஐயோன்ஸ்டன் செய்திருந்தார்.
