ADDED : மே 28, 2024 03:32 AM
அ நிறம் | அளவு
வில்லியனுார் : வில்லியனுார் அடுத்த தனத்துமேடு கிராமத்தை சேர்ந்தவர் சீனு,65; விவசாயி. நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்தார்.
நேற்று முன்தினம் சீனுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதால் மனமுடைந்த அவர். பூச்சி மருந்தை சாராயத்தில் கலந்து குடித்து, மயங்கி விழுந்தார்.
உடன் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார். புகாரின் பேரில் மங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





