ADDED : மார் 26, 2024 10:35 PM
அ நிறம் | அளவு
காரைக்கால் : காரைக்கால் அடுத்த தரங்கம்பாடி சந்திரப்பாடி மேலதெரு பகுதியை சேர்ந்த ரகுராம்,32; இவர் ஜே.சி.பி.,ஒட்டுனராக உள்ளார்.இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் நிதிஷ்குமார்.,24; இருவரும் பைக்கில் திருவேட்டக்குடி அருகே சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஹரி மற்றும் தெய்வமணி ஆகிய இருவரும் ஆபாசாக பேசி ரகுராம் மற்றும் நிதிஷ்குமாரை முன்விரோதம் காரணமாக தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த இருவரும் அரசு மருந்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
