தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனியார் பள்ளி மாணவர் மாயம்

தனியார் பள்ளி மாணவர் மாயம்

தனியார் பள்ளி மாணவர் மாயம்


ADDED : ஏப் 12, 2024 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2024 04:31 AM


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார் : கொடாத்துாரில் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு, சென்ற மாணவரை காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருக்கனுார் அடுத்த கொடாத்துார் புதுநகரைச் சேர்ந்தவர் சுரேஷ், கூலி தொழிலாளி. இவரது மகன் ரெனித்குமார், 13; திருக்கனுாரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ரெனித்குமார், வகுப்பறைக்கு வராமல் வெளியே சுற்றி வந்துள்ளார்.

இதையடுத்து, அவரது தாய் கோவிந்தம்மாள் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று மகன் வகுப்பறையில் உள்ளாரா என்று விசாரித்துள்ளார்.

இதையறிந்த ரெனித்குமார் மீண்டும் வீட்டிற்கு சென்றால் தாய் கண்டிப்பார் என்பதால், நேற்று முன்தினம் முதல் இதுவரை வீடு திரும்பவில்லை.

இது குறித்து கோவிந்தம்மாள் அளித்த புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து ரெனித்குமாரை தேடி வருகின்றனர்.

இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் 0413-2688435 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us