sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குரூப்-பி பதவியில் இட ஒதுக்கீடு; மறுப்பு அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்

/

குரூப்-பி பதவியில் இட ஒதுக்கீடு; மறுப்பு அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்

குரூப்-பி பதவியில் இட ஒதுக்கீடு; மறுப்பு அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்

குரூப்-பி பதவியில் இட ஒதுக்கீடு; மறுப்பு அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்


ADDED : ஜூலை 29, 2024 04:40 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : அரசிதழ் பதிவுப் பெறாத குரூப்--பி பணியிடங்களில் இடஒதுக்கீடு மறுத்து வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் கவர்னர், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு;

புதுச்சேரியில் கடந்த 2022ம் ஆண்டு துறைமுகத் துறையில் இளநிலைப் பொறியாளர் உள்பட 9 அரசுத் துறைகளில் மொத்தம் 180 அரசிதழ் பதிவுப் பெறாத குரூப்-பி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிட்டது.

இதில் புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 18 சதவீதம், மிக மிக பிற்படுத்தப்பட்டோர் 2 சதவீதம், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் 2 சதவீதம், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் 0.5 சதவீதம் ஆகிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் போராடியதன் விளைவாக 2023-ல் அரசிதழ் பதிவுப் பெறாத குரூப்-பி பணியிடங்களில் இடஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால், 9 துறைகளுக்கான 180 சான்றிதழ் பதிவுப் பெறாத பணிடங்களை நிரப்புவதில் இச்சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என, நிர்வாகம் மற்றும் சீர்திருத்தத்துறை சார்புச் செயலர் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார். இது சமூக நீதிக்கு எதிரானது. அரசிதழ் பதிவுப் பெறாத குரூப்--பி பணியிடங்களில் இடஒதுக்கீடு மறுத்து வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us