sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு நர்சிங் படிப்பில் இட ஒதுக்கீடு

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு நர்சிங் படிப்பில் இட ஒதுக்கீடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு நர்சிங் படிப்பில் இட ஒதுக்கீடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு நர்சிங் படிப்பில் இட ஒதுக்கீடு


ADDED : ஜூன் 29, 2024 06:17 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : அரசு பள்ளி மாணவர்களுக்கு நர்சிங் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென சென்டாக் மாணவர்கள், பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து நலச்சங்க தலைவர் நாராயணசாமி, கவர்னர் மற்றும் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

புதுச்சேரியில் நர்சிங் படிப்பிற்கான சேர்க்கை தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடந்து வருகிறது.

இதனால் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதுடன், வசதி படைத்த, தனியார் பள்ளி மாணவர்கள், வெளி மாநில மாணவர்கள் மட்டுமே புதுச்சேரி மாநிலத்தில் நர்சிங் படிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நர்சிங் படிப்பு என்பது எட்டாக்கனியாக மாறியுள்ளது. எனவே, அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரி மாநில மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல், அரசு பள்ளி மாணவர்களுக்கு நர்சிங் படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க கவர்னர், முதல்வர் ஆகியோர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us