தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது


ADDED : மார் 14, 2024 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2024 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: திருக்கனுார் ஏரிக்கரை பகுதியில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது.

இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று சந்தேகம்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், விழுப்புரம் மாவட்டம் பாதிராபுலியூர் பகுதியை சேர்ந்த அய்யனார், 48; மணிகண்டன், 28; என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் சோதனை நடத்தியதில், மொத்தம் 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள், ரூ.1200 மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் இருந்தது.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us