ADDED : அக் 18, 2025 07:19 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தை சேர்ந்த மணிவேல், 21, நண்பர்களுடன் கடந்த 13 தேதி மது குடித்தார். அங்கு ஒரு கும்பல் மது குடித்தனர்.
அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அக்கும்பல் மணிவேலனை கத்தியால் வெட்டி விட்டு, தப்பினர். தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து, பெரியகாட்டு பாளையத்தை சேர்ந்த ராகுல், 21, ஜீவா, 30, மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.
