தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணல் திருட்டு 4  பேர்  கைது 

மணல் திருட்டு 4  பேர்  கைது 

மணல் திருட்டு 4  பேர்  கைது 


ADDED : டிச 24, 2024 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2024 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டபபாக்கம்: லிங்காரெட்டிப்பாளையம் மலட்டாற்றில் மாட்டு வண்டியில் மணல் திருடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று அதிகாலை 3:00 மணியளவில் ரோந்து சென்றனர். லிங்காரெட்டிப்பாளையம் மலட்டாற்றில் இருந்து நான்கு மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக் கொண்டு, நெட்டப்பாக்கம் நேரு நகர் வழியாக வந்து கொண்டிருந்தனர்.

அவர்களை போலீசார் மடக்கினர். மாட்டுவண்டியில் மணல் திருடி வந்த கரியணிக்கம் காலனியைச் சேர்ந்த அர்தீஷ் 21, கல்மண்டபம் பேட் சிவலிங்கம், 24; சொக்கம்பேட் விஷ்வா, 20;திவான், 22,ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us