sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண் உட்பட 4 பேரிடம் ரூ. 9.13 லட்சம் மோசடி

/

பெண் உட்பட 4 பேரிடம் ரூ. 9.13 லட்சம் மோசடி

பெண் உட்பட 4 பேரிடம் ரூ. 9.13 லட்சம் மோசடி

பெண் உட்பட 4 பேரிடம் ரூ. 9.13 லட்சம் மோசடி


ADDED : செப் 29, 2025 12:45 AM

Google News

ADDED : செப் 29, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:புதுச்சேரியில் பெண் உட்பட 4 பேர் மோசடி கும்பலிடம் ரூ.9.13 லட்சம் இழந்துள்ளனர்.

முத்தியால்பேட்டையை சேர்ந்தவரை, டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் பகுதிநேர வேலையாக வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பண ம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார்.

இதைநம்பி, மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 4 லட்சத்து 43 ஆயிரத்து 600 முதலீடு செய்துள்ளார். பின், அதன் மூலம் வந்த லாபப்பணத்தை எடுக்க முயன்ற போது, முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.

இதேபோல், ரெட்டியார் பாளையத்தை சேர்ந்தவர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து 2 லட்சத்து 23 ஆயிரத்து 225, சாரம் பகுதியை சேர்ந்தவர் 67 ஆயிரம், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த பெண் குறைந்த வட்டிக்கு லோன் பெற விண்ணப்பித்து ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 334 என மொத்தம் 4 பேர் மோசடி கும்பலிடம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 159 ரூபாய் இழந்துள்ளனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us