Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அம்பு போடுதல் வைபவம் 

அம்பு போடுதல் வைபவம் 

அம்பு போடுதல் வைபவம் 


ADDED : அக் 13, 2024 07:31 AM

Follow on Google

ADDED : அக் 13, 2024 07:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி வரதராஜப்பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவம் நிறைவாக, பெருமாள் குதிரை வாகனத்தில் தசமி அம்பு போடுதல் வைபவம் நடந்தது.

புதுச்சேரி, காந்தி வீதியில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில், நவராத்திரி உற்சவம் கடந்த 3ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி, தினமும் இரவு 7:00 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் உள் புறப்பாடு நடக்கிறது.

நவராத்திரி நிறைவாக, நேற்று காலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது.

மாலை 6:00 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் உள் புறப்பாடாகி, 'தசமி அம்பு போடுதல் வைபவம்' நடந்தது.

நேற்று புரட்டாசி 4வது சனிக்கிழமை என்பதால், அதிக அளவில் பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap