sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு பெங்களூரு வாலிபர் கைது

/

கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு பெங்களூரு வாலிபர் கைது

கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு பெங்களூரு வாலிபர் கைது

கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு பெங்களூரு வாலிபர் கைது


ADDED : மார் 23, 2025 04:10 AM

Google News

ADDED : மார் 23, 2025 04:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த பெங்களூரு வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில், லோன் ஆப் மூலம் பணம் வழங்கி, மேலும் அதிக பணம் கட்ட வேண்டும் என, மர்ம கும்பல் பொது மக்களை மிரட்டி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வெளி நாடுகளில் பணம் பரிவர்த்தனை தொடர்பாக, மர்ம கும்பலிடம் ஏமாந்த, புதுச்சேரியை சேர்ந்த ஒருவர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து, கிரிப்டோ கரன்சி மோசடி செய்யும் கும்பலை சேர்ந்த, செரிப், சவி ஆகிய இரண்டு பேரை, கேரளாவில், கடந்த ஒரு மாதத்திற்கு முன், சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தேடப்படும் மோசடி கும்பல், பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிக்க, புதுச்சேரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, தியாகராஜன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த வழக்கில், தலைமறைவாக இருந்த பெங்களூரு, பலானாஹல்லி பகுதியை சேர்ந்த புனித், 24, என்பவரை, நேற்று முன்தினம், போலீசார் பிடித்து வந்து, விசாரித்தனர். அவரை நேற்று கைது செய்து, கோர்ட்டில், ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us