sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண்ணிடம் மோசடி தம்பதி மீது வழக்கு

/

பெண்ணிடம் மோசடி தம்பதி மீது வழக்கு

பெண்ணிடம் மோசடி தம்பதி மீது வழக்கு

பெண்ணிடம் மோசடி தம்பதி மீது வழக்கு


ADDED : செப் 23, 2025 08:12 AM

Google News

ADDED : செப் 23, 2025 08:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பெண்ணிடம் பணம், நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி கொண்டு மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முதலியார்பேட்டை விடுதலை நகரைச் சேர்ந்தவர் ஷாலினி,26; , இவர் கடந்த 2020ம் ஆண்டிற்கு முன் நைனார் மண்டபத்தில் வசித்து வந்தார். அப்போது அவர் எதிர்வீட்டில் வசித்த பார்த்திபன் அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். இந்நிலையில் ஷாலினிக்கு கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடந்து, கருத்து வேறுபாடு காரண மாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனை பயன்படுத்திக் கொண்ட ராஜலட்சுமி, பார்த்திபன் ஆகியோர் ஷாலினியிடம் பல தவணையாக பணம், பெற்றுள்ளனர்.

அதோடு மட்டுமல்லாமல் ஷாலினி பெயரில் மகளிர் குழுவில் ரூ. 3 லட்சத்து 51 ஆயிரம் கடன் பெற்று அதனையும் அவர்கள் அடைக்கவில்லை. மேலும் ஷாலினியிடம் இருந்த 15 சவரன் நகைகள், அலமாரி, வெள்ளி, பித்தளை உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை பெற்று அதனை விற்றுள்ளனர்.

மேலும் தாய் மற்றும் நண்பர்களிடம் ஷாலினி ரூ. 5.50 லட்சம் பணம் வாங்கி தந்துள்ளார்.

ஷாலினியிடம் பணம் கொடுத்தவர்கள் அவரிடம் கேட்டபோது. ஷாலினி தான் 10 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மற்றும் 15 சவரன் நகை ,வெள்ளி பொருட்கள் மற்றும் பொருட்களை ராஜலட்சுமியிடம் கேட்டுள்ளார். அவர்கள் பணம் தராமல் காலம் தாழ்த் தி வந்துள்ளார்.

ஷாலினி புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் பார்த்திபன், ராஜலட்சுமி இருவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us